முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் விபத்து என்றால் யார் பொறுப்பு: ஆர்சிபி கேள்வி

Siva

வெள்ளி, 6 ஜூன் 2025 (15:52 IST)
ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டம் என்பது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்தது அல்ல என்றும், இது முழுக்க முழுக்க அரசின் உத்தரவு பேரில் நடந்தது என்றும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கலந்து கொண்ட ஒரு விழாவில்  பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க வேண்டியது யார் பொறுப்பு என்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளது.
 
இந்த கொண்டாட்டம் உண்மையில் அரசின் அழைப்பின் பேரில் தான் நடந்தது என்றும், மூத்த பணியாளர்கள், மூத்த காவல்துறை அதிகாரிகளும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யும் பொறுப்பை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் காவல் துறையிடம் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஒப்படைத்து இருந்தது என்றும், அந்த இடத்தின் வாடகை மட்டுமே எங்களது பொறுப்பு எனவும், இந்த நிகழ்ச்சி முழுவதும் முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் நடந்தது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இதில் நடந்த விபத்துக்கும் கர்நாடக கிரிக்கெட் சங்கத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முழுக்க முழுக்க கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை மட்டுமே குற்றவாளியாக குற்றம் சாட்டுவது காவல் துறையும் அரசும் செய்த தவறான நீதி என்றும், மனுவில் குற்றம் சாட்டப்பட்ட குற்றங்கள் அனைத்தும் அரசு அதிகாரிகள் மீது திரும்ப வேண்டியது என்றும் கூறப்பட்டுள்ளது.
 
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும்போது பல திடுக்கிடும் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்