தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுக்கள்!

புதன், 21 ஏப்ரல் 2021 (07:34 IST)
தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு குவியும் பாராட்டுக்கள்!
நேற்று முன்தினம் மும்பையில் உள்ள வாணங்கி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற பெண் ஒருவருடன் சென்ற சிறுவன் எதிர்பாராத வகையில் தண்டவாளத்தில் விழுந்து விட்டார். இதனை அருகில் இருந்து பார்த்த ரயில்வே ஊழியர் ஒருவர் தன்னுடைய உயிரையும் துச்சமாக மதித்து அந்த சிறுவனை காப்பாற்றிய தன்னையும் கடைசி நொடிகள் காப்பாற்றிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது 
 
உண்மையான ஹீரோவான இந்த ரயில்வே ஊழியருக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று அந்த ரயில்வே ஊழியர் தன்னுடைய அலுவலகத்துக்கு வந்தபோது அவருடைய சக ஊழியர்களும் மேலதிகாரிகளும் அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்
 
மேலும் அவருக்கு விருது வழங்கவும் மத்திய மாநில அரசுகளிடம் பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன இதுகுறித்து அந்த ரயில்வே ஊழியர் கூறியபோதும் அந்த குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டும் தான் எனக்கு இருந்தது என்னுடைய உயிரை கூட நான் கவலைப்படவில்லை என்னால் காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என்று தெரிவித்தார்
 
 

Railway Employee Mayur Shelke was conferred with DRM Award for his dare devil bravery to save a child from running over by a train

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்