கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும், அதனைத் தொடர்ந்து நடந்த பல மாநில சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 15 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி செய்துவந்த டெல்லியில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாமல் போனது.
கட்சியில் தனது ஆலோசனைகளை மூத்த தலைவர்கள் சிலர் ஏற்காமல் தடுத்துவிடுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கருதுவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரையும் புறக்கணித்துவிட்டு ராகுல் காந்தி விடுமுறையில் சென்றுள்ளார். அவர் எங்கு சென்றார் என்பது குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிடவில்லை.