கொரோனாவுக்கு அரசின் அடுத்த நடவடிக்கை இதுதான்! – ராகுல்காந்தி கிண்டல் ட்வீட்!

வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (10:56 IST)
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில் தற்போது கடந்த ஆண்டை விட பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் ஊரடங்குகளை அறிவித்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் இதுவரையிலான கொரோனா நடவடிக்கைகள் குறித்து பதிவிட்டுள்ள ராகுல் காந்தி “மத்திய அரசின் கொரோனா நடவடிக்கைகள்; படி 1 – ஊரடங்கு விதித்தல், 2. மணி அடித்தல், 3. கடவுளை வாழ்த்தி பாடுதல்” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்