பதவி நீக்கம் எதிரொலி: அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு நெருக்கடியா?

சனி, 25 மார்ச் 2023 (11:36 IST)
எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அரசு பங்களாவை காலி செய்ய அவருக்கு நெருக்கடி தரப்படுவதாக வெளி வந்திருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து நேற்று மக்களவைச் செயலாளர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை தகுதி நீக்கம் செய்தார் 
 
இந்த நிலையில் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்து வரும் நிலையில் அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்க முடியாத வகையில் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த 2004ஆம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாக உள்ளதால் அவர் அந்த பங்களாவில் குடியிருந்து வரும் நிலையில் தற்போது அவரை காலி செய்ய நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்