குவைத் தீ விபத்து தொடர்பாக பிரதமர் ஆலோசனை..! தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு..!!

Senthil Velan

புதன், 12 ஜூன் 2024 (22:47 IST)
குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குவைத் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குவைத் நகரில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று  பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
பிரதமர் மோடி இரங்கல்:
 
இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ இந்தியத் தூதரகம் அங்குள்ள அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது எனத் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 
 
பிரதமர் மோடி ஆலோசனை:
 
குவைத் தீ விபத்து தொடர்பாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். குவைத் தீ விபத்தில் காயமடைந்த இந்தியர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளவும், இறந்தவர்களின் உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கூட்டத்தில் பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் உத்தரவின் பேரில்  மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங் குவைத் புறப்பட்டார்.
 
உதவி எண்கள் அறிவிப்பு:
 
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி அயலகத்தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொண்டு விபத்தில் சிக்கிய தமிழர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

ALSO READ: அமித்ஷா என்ன சொன்னார்.? ஆள விட்றா.! கையெடுத்து கும்பிட்ட தமிழிசை..!

இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்