பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலனளிக்காது: பிரசாந்த் கிஷோர்

புதன், 22 மார்ச் 2023 (07:47 IST)
பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளின் அரசியல் ரீதியான கூட்டணி எந்தவிதமான பலனையும் அளிக்காது என்றும் சித்தாந்த ரீதியான கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசனை கூறும் பிரசாந்த் கிஷோர் சித்தாந்தத்தின் அடிப்படையில் கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 
 
இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்த்து போராட சித்தாந்தங்களின் கூட்டணி இருக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் பாஜகவை வீழ்த்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
காந்தியவாதிகள், அம்பேத்கரிஸ்டுகள், சோசியலிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் ஆகியோர்களின் சித்தாந்த கூட்டணி வேண்டும் என்றும் பாஜகவில் வீழ்த்த வேற எந்த வழியும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் அரசியல் ரீதியான ஒற்றுமை எந்தவிதமான பலனையும் அளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்