146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

Prasanth K

புதன், 11 ஜூன் 2025 (08:47 IST)

உலக மக்கள் தொகை குறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா மக்கள் தொகை 146 கோடியை தாண்டிவிட்டதாக அறிவித்துள்ளது.

 

உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்த சீனா கடந்த சில ஆண்டுகளில் மக்கள் தொகையை குறைத்த நிலையில், இந்தியாவில் மக்கள் தொகை அதிகரித்து வந்ததால் தற்போது 146 கோடியை தாண்டியுள்ளது. அதனால் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா மாறியுள்ளது.

 

இந்திய மக்கள் தொகையில் 14 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் 24 சதவீதமாகவும், 10 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் 26 சதவீதமாகவும், 64 வயதிற்கு உட்பட்ட உழைக்கும் மக்கள் 68 சதவீதமாக உள்ளனர். 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 7 சதவீதம் உள்ளனர்.

 

இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளதாக கூறும், அந்த அறிக்கை ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 71 ஆண்டுகளாகவும், பெண்களுக்கு 74 ஆண்டுகளாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இந்திய மக்கள் தொகை அடுத்த 40 ஆண்டுகளில் 170 கோடியாக உயரும் என்றும், அதன் பின்னர் குறையத் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்