மக்கள் பிரதிநிதிகள் மீது இருக்கும் மக்களின் நம்பிக்கையை பாதுகாக்க இந்த மசோதா என்று கூறப்படுகிறது. தற்போதைய சட்டத்தின்படி, ஒரு எம்பி, எம்எல்ஏ, அல்லது அமைச்சர்கள் தண்டனை உறுதியாகும் வரை காவலில் இருந்தாலும் அவர்கள் பதவியில் இருக்கலாம்.
ஆனால் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அமலுக்கு வந்த பின்னர் ஒரு குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் அல்லது பிரதமரே கைது செய்யப்பட்டாலும் அவர் 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31வது நாள் அவரது பதவி தானாக பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.