பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைப்பு- மத்திய அரசு

Sinoj

வியாழன், 14 மார்ச் 2024 (22:15 IST)
பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.

எண்ணெய்  நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண் ணெய் விலை மற்றும் டாலருக்கு நியராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், விலையை நிர்ணயம் செய்கின்றன.
 
இந்த நிலையில், சென்னையில், இன்று 663 வது நாளாக பெட்ரோல், டீசல், மாற்றம் இல்லாமல் விற்பனையானது.
 
இன்று காலை நேரம் நிலவரப்படி பெட்ரோல் லிட்டர் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24 க்கும் விற்பனையானது.
 
இந்த நிலையில், பெட்ரோல், டீசல், விலையை குறைத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. 
 
அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார்.
 
663 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்