மும்பை சாலையில் மீன் பிடிக்க துவங்கிய மக்கள்: மழையின் எதிரொலி!!

புதன், 14 ஜூன் 2017 (11:45 IST)
மும்பையில் மழையின் காரணமாக வீதிகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில் மக்கள் மீன் பிடித்தது தற்போது வைரலாகி வருகிறது. 


 
 
மகாராஷ்டிராவில் வாட்டி வதைத்த வெயில் தற்போது தனது தாக்கத்தை குறைத்துக்கொண்டு திடீர் திடிரென மழை பெய்து வருகிறது. 
 
அதிலும் குறிப்பாக மும்பையில் பரவலாக நல்ல மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 
 
அந்த நீரில் மீன்களும் காணப்பட்டன. மக்கள் சாலையில் மீன் பிடித்த புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வைரலாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்