கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னையில் தரையிறங்கிய விமானத்தின் மீது லேசர் ஒளி அடிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஒரு விமானம் மீது லேசர் ஒளி வீசப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இது சமூக விரோதிகள் செயலா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
புனேவில் இருந்து சென்னைக்கு இன்று காலை வந்த விமானத்தில் 178 பயணிகள் பயணம் செய்தனர். அந்த விமானம் சென்னையில் தரையிறங்கும் போது, பரங்கிமலை பகுதியில் இருந்து விமானத்தின் மீது சக்திவாய்ந்த லேசர் ஒளி அடிக்கப்பட்டது.
உடனடியாக விமானி, விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த நிலையில், விமானத்தை பாதுகாப்பாக இறக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், விமான நிலையத்தில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.