திங்கள் வரை மக்களவை ஒத்திவைப்பு!

வெள்ளி, 23 ஜூலை 2021 (14:32 IST)
பெகாசஸ் விவகாரத்தை மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. 

 
மத்திய மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்னிட்டு எதிர்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் பிற்பகல் அவை துவங்கப்பட்ட போது பெகாசஸ் விவகாரத்தை மக்களவையில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இதனால் மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்