இத்தகைய நிலையில், நாட்டில் அசைவ உணவுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்ட முதல் நகரமாக குஜராத் மாநிலத்தின் பவுநகர் மாவட்டத்தில் உள்ள பளிதானா நகரம் திகழ்கிறது. இந்த நகரில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஜைன சன்னியாசிகள் உண்ணா விரதம் இருந்து 250 இறைச்சிக்கடைகளை மூட கோரினர். இதையடுத்து, ஜைன சமுதாயத்தின் உணர்வுகளை மதித்து மாநில அரசு அசைவ உணவுக்கு முழு தடை விதித்தது.