”ஐயோ.. என் விளைச்சல்லாம் மழையில போகுதே” கதறிய விவசாயி Video! அமைச்சர் ரியாக்‌ஷன்!

Prasanth Karthick

திங்கள், 19 மே 2025 (13:28 IST)

மகாராஷ்டிராவில் பெய்த கனமழையில் விளைப்பொருட்கள் அடித்து செல்வதை காப்பாற்ற முடியாமல் விவசாயி கதறும் வீடியோ பார்ப்பவர்களை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

 

தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் எதிர்பாராத விதமாக பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி கௌரவ் பன்வார், தான் சாகுபடி செய்த வேர்க்கடலைகளை கொண்டு சென்றபோது கனமழையால் வேர்க்கடலைகள் வெள்ளத்தில் அடித்துச் சென்றது. அவற்றை கொட்டும் மழையில் காப்பாற்ற அவர் முயற்சிக்கும் வீடியோ பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

 

இந்த வீடியோ வைரலான நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கும் சென்றது. அதை தொடர்ந்து அந்த விவசாயியிடம் ஃபோன் செய்து பேசிய அமைச்சர், அவருக்கு ஆறுதல் சொன்னதோடு இழப்பீட்டிற்கான நிவாரணமும் வழங்குவதாக ஆறுதல் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

वाशिमच्या मनोरा मार्केटमधील एक हृदयद्रावक व्हिडिओ व्हायरल होत आहे, ज्यामध्ये एक शेतकरी अवकाळी पावसामुळे नाल्यात वाहून जाण्यापासून धान्य वाचवण्याचा प्रयत्न करत आहे. महायुती सरकार या गरजू शेतकऱ्यांना मदत करेल का? कसे आणि केव्हा?#MaharashtraGovernment #washim #rains pic.twitter.com/hbQFYVlOKP

— Manasi (@Manasisplaining) May 17, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்