நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று: திணறுகிறதா அரசு?

வெள்ளி, 20 மார்ச் 2020 (09:54 IST)
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. 
 
சீனாவின் உருவெடுத்த கொரோனா இப்போது பல நாடுகளுக்கு பரவி பீதியை கிளப்பி வருகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த நிலையில் உலக நாடுகள் திணறி வருகின்றன. கொரோனாவால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.  
 
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 195 ஆக உயர்ந்துள்ளது. 
 
பாதிக்கப்பட்டவகளில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசும் மாநில அரசும் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த பல கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்