புத்தக சுமையை குறைக்க வீட்டு பாடத்துக்கு தடை விதித்த மாநில அரசு

வியாழன், 20 ஜூலை 2017 (13:50 IST)
தெலங்கானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வீட்டு பாடம் கொடுக்க தடை விதித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.


 

 
பள்ளி மாணவர்களின் புத்தகச் சுமை மற்றும் வீட்டு பாடம் தடுப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தெலங்கானா மாநில அரசு, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான வீட்டு பாடத்துக்கு தடை விதித்துள்ளது.
 
இந்த தடை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், புத்தகச் சுமையால் தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளி மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்