ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்றம்: ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா

புதன், 16 செப்டம்பர் 2020 (19:45 IST)
ரூ.861.90 கோடியில் புதிய நாடாளுமன்றம்: ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா
மத்திய அரசு புதிய பாராளுமன்ற கட்டடத்தை கட்டுவதற்கு திட்டமிட்டது என்பதை குறித்த செய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்தது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்த புதிய பாராளுமன்றத்தை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மும்பையை சேர்ந்த டாடா கட்டுமான நிறுவனம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மும்பையை சேர்ந்த கட்டுமான நிறுவனம் புதிய நாடாளுமன்றத்தை கட்டுவதற்காக ரூபாய் ரூ.861.90 கோடி கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து டாடா நிறுவனத்தின் பங்குகள் நாளை முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய பாராளுமன்றக் கட்டிடத்தின் டிசைன் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த கட்டிடத்தை டாடா நிறுவனம் வெற்றிகரமாக கட்டி முடிக்கப்படும் என்ற செய்தி தற்போது சமூக ஊடகங்களிலும் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்