நள்ளிரவில் சரிந்த கட்டிடம் - 11 பேர் பலி, மும்பையில் சோகம்!

வியாழன், 10 ஜூன் 2021 (08:44 IST)
மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து. 

 
மும்பை மால்வானி பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில் நான்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த 11 பேரில் 7 குழந்தைகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
படுகாயம் அடைந்த 8 பேரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் படையினர் இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருவதையடுத்து பலி எண்ணிக்கை கூடும் என கருதப்படுறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்