2024 தேர்தலுக்குப் பின்னர் மோடி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிடுவார்: லாலு பிரசாத் யாதவ்..!

திங்கள், 31 ஜூலை 2023 (14:19 IST)
2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் பிரதமர் மோடி வெளிநாட்டில் செட்டில் ஆகி விடுவார் என பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கிண்டலுடன் கூறியுள்ளார்.  
 
நேற்று பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லாலு பிரசாத் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது  எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி சந்தர்ப்பவாத அரசியலால் ஆனது அல்ல என்றும்  இந்தியாவிலிருந்து சிலரை வெளியேற்ற வேண்டிய கூட்டணி என்றும் தெரிவித்தார் 
 
பிரதமர் மோடி இந்தியாவிலிருந்து வெளியேற திட்டமிட்டு இருக்கிறார் என்றும் அதற்காக அவர் எந்த நாட்டில் தங்கலாம் என்று நிறைய நாடுகளை சுற்றி பார்த்து வருகிறார் என்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அவர் ஏதாவது ஒரு வெளிநாட்டில் செட்டில் ஆகி விடுவார் என்றும் தெரிவித்தார்.  அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்