நாடாளுமன்றம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி-க்கள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி “பாஜக நாட்டை காக்க முயலும் போது காங்கிரஸ் குடும்பத்தை காக்க முயல்கிறது. ஒரு குடும்பத்திற்காக காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது. மேலும் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் அவரசரநிலை காலத்தை நினைவுப்படுத்துவது போல் இருக்கிறது. நீங்கள் அனைவரும் உங்கள் தொகுதிகளுக்கு சென்று காங்கிரசை அம்பலப்படுத்துங்கள்” என குற்றம் சாட்டியுள்ளார்.