தொலைக்காட்சி அரங்கத்துக்கு சென்று கொலையை ஒப்புக்கொண்ட நபர் !

வியாழன், 16 ஜனவரி 2020 (08:01 IST)
சண்டிகாரில் உள்ள நியுஸ் 18 தொலைக்காட்சி அரங்கத்துக்கு வந்த மனேந்தர் சிங் என்பவர் தன் காதலியைக் கொலை செய்ததை ஒத்துக்கொண்டுள்ளார்.

சண்டிகார் மாவட்டத்தைச் சேர்ந்த மணிந்தேர் சிங் என்பவர் சப்ரஜித் என்ற பெண்ணைக் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்துள்ளார். ஆனால் சப்ரஜித்துக்கு அவருடைய உறவினர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக மணிந்தேர் சந்தேகித்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 31 ஆம் தேதி அவரை ஹோட்டலில் சந்தித்த இருவரும் இது சம்மந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் கோபத்தில் மனிந்தேர், சப்ரஜித்தின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தலைமறைவான அவரைப் போலிஸார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென சண்டிகார் நியுஸ் 18 தொலைக்காட்சி அரங்குக்கு வந்து தன் காதலியைக் கொலை செய்ததை மனேந்தர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து அவரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்