மர்ம உறுப்பை அறுத்த காதலன்: திருமணத்துக்கு மறுத்ததால் விபரீதம்!

புதன், 10 ஆகஸ்ட் 2016 (11:23 IST)
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர், அவரது காதலி திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் தன்னுடைய மர்ம உறுப்பை அறுத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பதான்கோட் சுந்தர்நகரை சேர்ந்த வாலிபர் ஒருவர் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். சொந்த வீடு வாங்கிய பின்னர் தான் திருமணம் என அந்த பெண் கூறி வந்துள்ளார்.
 
இந்நிலையில் அந்த பெண் பெற்றோரை பிரிந்து வந்து காதலனுடன் வாடகை வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். சொந்த வீடு வாங்கினால் தான் திருமணம் எனவும், சொந்த வீடு வாங்கவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் தனது ஆணுறுப்பை அறுத்துக் கொண்டார். இரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அவரது வீட்டினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்