ஆபரேஷன் சிந்தூரை அரசியலாக்க வேண்டாம்.. மோடிக்கு மமதா பானர்ஜி பதிலடி..!

Siva

வியாழன், 29 மே 2025 (17:59 IST)
திரிணமூல் காங்கிரஸ்  அரசை கடுமையாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  பதிலடி கொடுத்துள்ளார்.
 
எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருமித்த அணியாக வெளிநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி பேசிக் கொண்டிருக்கையில், மோடி தீவிரவாத பிரச்சனையை தனது அரசியலுக்கு பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
 
அனைத்து எதிர்க்கட்சிகள் சேர்ந்து வெளிநாடுகளில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதத்தை வெளிக்கொணர முயற்சிக்கின்றன. அதே சமயம், மோடிஜி அரசியல் லாபத்திற்காக மேற்கு வங்க அரசை குறிவைக்கிறார். 
 
‘ஆபரேஷன் பெங்கால்’ போன்ற புதிய வார்த்தைகள் உருவாக்கி மக்களின் கவனத்தை திருப்ப முயல்கின்றனர். தைரியம் இருந்தால் நாளையே தேர்தலுக்கு வாருங்கள். வங்காளம் தயாராக இருக்கிறது என எச்சரித்தார்.
 
மத்திய அரசு ‘ஆபரேஷன் சிந்தூர்’ஐ அரசியலாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
 
நாங்கள் எப்போதும் தேசிய பாதுகாப்புக்காக மத்திய அரசை ஆதரித்து செயல்பட்டோம். அதே ஒத்துழைப்பை மத்திய அரசிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேசிய விஷயங்களை அரசியல் ஆக்க வேண்டாம். நாங்கள் நமது  நாட்டை பாதுகாக்க முயல்கிறோம். இந்த நேரத்தில் அதை குறைந்தபட்சம் மதியுங்கள்,” எனவும் மம்தா கூறினார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்