எதிர்க்கட்சித் தலைவர்கள் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஒருமித்த அணியாக வெளிநாட்டில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி பேசிக் கொண்டிருக்கையில், மோடி தீவிரவாத பிரச்சனையை தனது அரசியலுக்கு பயன்படுத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
நாங்கள் எப்போதும் தேசிய பாதுகாப்புக்காக மத்திய அரசை ஆதரித்து செயல்பட்டோம். அதே ஒத்துழைப்பை மத்திய அரசிடம் நாங்கள் எதிர்பார்க்கிறோம். தேசிய விஷயங்களை அரசியல் ஆக்க வேண்டாம். நாங்கள் நமது நாட்டை பாதுகாக்க முயல்கிறோம். இந்த நேரத்தில் அதை குறைந்தபட்சம் மதியுங்கள்,” எனவும் மம்தா கூறினார்