தேசிய கொடியை அவமதித்ததாக புகார்:சர்ச்சையில் மல்லிகா ஷெராவத்

சனி, 31 மே 2014 (15:25 IST)
பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் நடிக்கும் புதிய படத்தில் அவர்  மூவர்ண நிறத்திலான துணியை அணிந்திருப்பது போல போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தேசிய கொடியை அவமதிப்பது போல உள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
மல்லிகா ஷெராவத் நடித்த 'டர்ட்டி பாலிடிக்ஸ்' என்ற படத்தின் போஸ்டர் வெளியிடபட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் மல்லிகா தேசிய கொடியில் இருக்கும் நிறங்களை கொண்ட துணியை ஆபாசமாக அணிந்து, ஒரு விஐபி காரின் மீது கையில் ஒரு சிடியுடன் அமர்ந்துள்ளார். அவருக்கு  பின்புறத்தில் ராஜஸ்தான் மாநில சட்டமன்றம் உள்ளது.
 
இதை தொடரந்து அவர் இந்திய தேசிய கொடியையும், ராஜஸ்தான் சட்டமன்றத்தையும் அவமதித்து விட்டார் என சர்ச்சை கிளம்பியுள்ளது.
 
இதற்கு பதில் அளித்துள்ள படத்தின் தயாரிப்பாளர், பொகாடியா மல்லிகா அணிந்திருக்கும் உடையில் அசோக சக்கரம் இல்லை. அது எப்பது தேசிய கொடியாக  முடியுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்