தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா! – ஒமிக்ரானா என பரிசோதனை!

திங்கள், 29 நவம்பர் 2021 (11:55 IST)
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அது ஒமிக்ரான் வைரஸா என சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்த நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பரவியுள்ள கொரோனா ஒமிக்ரான் வகையா என்பது குறித்து சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்