உயர் ஜாதிப் பெண்ணை திருமணம் செய்த அண்ணன்: தங்கைகளை பலாத்காரம் செய்து நிர்வாணப் படுத்திய கிராம பஞ்சாயத்து

சனி, 29 ஆகஸ்ட் 2015 (11:07 IST)
உத்திர பிரதேசம் மாநிலம் பாக்பட் மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் .ரவி என்பவர் அந்த கிராமத்தி்ல  உயர் சாதி பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கிராமதிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த உயர் சாதியினர் அவனை பழிவாங்குவதற்க்காக அவரது குடும்பத்தில் உள்ள அவரது சகோதரிகளை கற்பழித்து  நிர்வாணப் படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பலமுறை  மாவட்ட காவல் துறைக்கு பாதிக்கப்பட்ட சகேதாரிகள் புகார் செய்துள்ளனர். ஆனால் அந்த உயர் சாதியினருக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கததால்.தற்பொழுது பாதிக்கப்பட்ட  சகோதரிகள்  உச்ச நீதிமன்றத்தில் நாடியுள்ளார்.  இதுகுறித்து விசாரித்த உச்ச நீதிமன்றம் இரண்டு வரத்துக்குள் பாதில்லளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்