மணீஷ் சிசோடியாவின் ரூ.52 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி..!

சனி, 8 ஜூலை 2023 (10:12 IST)
டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான ரூ. 52 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி அரசு சில ஆண்டுகளுக்கு முன்னர் அமல் படுத்திய புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது. 
 
இதில் துணை முதல்வர் மணி சிசோடியா கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அவருக்கு சொந்தமான 53 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன 
 
அமலாக்கத்துறையின் அந்த அதிரடி நடவடிக்கை டெல்லி ஆம் ஆத்மி அரசை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்