சிறுத்தையை அடித்துக் கொன்ற கிராம மக்கள்

வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:18 IST)
ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே உள்ள மண்டவர் கிராமத்தில் சிறுத்தை புலி ஒன்றை கிராம மக்கள் தடிகளால் தாக்கி கொன்றனர்.



காலை 8.10  மணிக்கு சிறுத்தை புலி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கும், இங்கும் திரிந்துக் கொண்டிருந்தது. இதனைகண்ட பொதுமக்கள் தெறித்து ஓடினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் வலை விரித்தும், சிறுத்தை சிக்கவில்லை. சிறுத்தை புலி தாக்கியதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் ஒன்று கூடி  கூர்மையான ஆயுதங்கள் மற்றும் கம்புகளால் சிறுத்தை புலியை வளைத்து பிடித்து அடித்து கொண்டனர். ரத்தம் சொட்ட, சொட்ட வீதிகளில் அந்த சிறுத்தை புலி இழுத்து செல்லப்பட்டது.



சிறுத்தை இறந்ததை அறிந்த கொண்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். வனத்துறையினர் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்