ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலையில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர் அல்தாஃப் லல்லி சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளன.
அதேபோல் பந்திபோரா மாவட்டத்தின் கோல்னார் பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் காவல்துறையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தலைவர் அல்தாஃப் லல்லி உயிரிழந்தார், மேலும் இரு வீரர்கள் காயமடைந்தனர்.