வெளிநாட்டு காதலருக்காக கணவனைக் கொலை செய்த மனைவி – நாடகம் அம்பலம் !

ஞாயிறு, 17 நவம்பர் 2019 (12:35 IST)
தனது கணவரை காதலரோடு சேர்ந்து கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகம் ஆடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க ரயில்வே துறையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் நிர்மல்குமார் என்பவர் தனது மனைவி சோனாலி மற்றும் குழந்தையோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி அவர் கால்வாயில் விழுந்து இறந்து விட்டதாக போலீஸாருக்குத் தகவல் வந்துள்ளது.

அதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியபோது அவரது கழுத்தை நெறித்துக் கொலை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மனைவியிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார்.

அதையடுத்த்து அவர் செல்போன் கால்களை சோதனை செய்தபோது வெளிநாட்டில் இருக்கும் தனது காதலர் ஜமீல் என்பவருடன் பேசியது தெரியவந்துள்ளது. ஜமீலும் சோனாலியும் கல்யாணத்துக்கு முன்பே காதலர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜமீலுடன் பழகுவதை அறிந்த கணவரை இரண்டு பேரும் சேர்ந்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்