கேரளாவில் குறைந்த கொரோனா; நவம்பரில் பள்ளிகள் திறப்பு!

ஞாயிறு, 19 செப்டம்பர் 2021 (15:26 IST)
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தீவிரமாக இருந்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளதால் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் பல மாதங்களாகவே கொரோனா பாதிப்பு இருந்து வரும் நிலையில் சமீப காலமாக பாதிப்புகள் குறைந்து வந்தன. இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கு வார விடுமுறைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது கேரளாவில் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கேரளாவில் நீண்ட காலமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வரும் நிலையில் பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன, இதனால் நவம்பர் 1ம் தேதி முதல் கேரளாவில் 10,12 வகுப்புகளுக்கும், 15ம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளி திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்