மலையாள நடிகர் சித்திக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்... கேரள போலீஸ் அதிரடி..!

Mahendran

வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (11:07 IST)
பிரபல மலையாள நடிகர் சித்திக் எதிராக கேரளா போலீஸ் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல நடிகையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல நடிகர் சித்திக் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், நடிகர் சித்தியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். நடிகர் சித்திக் அரசியல் பிரபலம் என்பதால், அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லாமல் இருக்க, போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்திக் தற்போது தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. அவருடைய ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குள், அவரை கைது செய்ய போலீசார் தீவிர முயற்சியில் இருக்கின்றனர். அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதால், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்