கேரளாவில் மட்டும் குறையாத கொரோனா: இன்று 33,538 பேர்கள் பாதிப்பு!

சனி, 5 பிப்ரவரி 2022 (18:27 IST)
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பத்தாயிரத்துக்கும் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாமல் உள்ளது
 
கேரள மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 33,538  என்றும் ஒரே நாளில் கொரோனாவால் பாலியானவர்களின் எண்ணிக்கை 22 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கேரள மாநிலத்தில் கொரோனாவால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 58,33,762 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 3,52,399 என்றும் கேரள மாநில சுகாதார துறை அறிவித்துள்ளது
 
கேரள மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தும், அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர்எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் அதிகமாக தொடர்ந்து இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்