ஓய்வு பெற்ற நீதிபதி திடீர் தற்கொலை: அதிர்ச்சியில் மனைவியும் தற்கொலை

சனி, 6 அக்டோபர் 2018 (09:41 IST)
ஆந்திர மாநிலத்தில் திருப்பதியை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ஒரே இடத்தில் அடுத்தடுத்த நாட்களில் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள  திருச்சானூர் என்ற பகுதியை சேர்ந்தவர் சுதாகர்,. இவர் ஓய்வு பெற்ற நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நேற்று காலை ரேணிகுண்டா அருகே ரயிலின் முன்பு திடீரென பாய்ந்து சுதாககர் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனார்.

இந்த நிலையில் கணவர் சுதாகர் தற்கொலையால் அவரது மனைவி வரலட்சுமி சோகமாக யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். இந்த நிலையில், தனது கணவர் தற்கொலை செய்த அதே இடத்தில் நேற்று இரவு ரயில் முன் பாய்ந்து மனைவியும் தற்கொலை கொண்டார்.

ஒரே நாளில் அடுத்தடுத்து கணவர்,  மனைவி ஆகிய இருவரின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த ரேணிகுண்டா ரயில்வே போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்