ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் உற்பத்தி மீதான தடை நீக்கம்!

புதன், 11 ஜனவரி 2023 (22:24 IST)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடர் உற்பத்தியை ரத்து செய்த மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்தது
 
 இதனை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில்  மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் உத்தரவை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. 
 
ஜான்சன் அண்ட் ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தினால் புற்றுநோய் ஏற்படுத்துவதற்கான கூறுகள் உள்ளன என்று குற்றச்சாட்டப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்