குடியரசுத் தலைவர் மகளுக்கு ஃபேஸ்புக்கில் ஆபாச எஸ்.எம்.எஸ்

சனி, 13 ஆகஸ்ட் 2016 (18:35 IST)
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மகளுக்கு மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஆபாச தகவல் அனுப்பிள்ளார். 


 

 
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகளும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான சர்மிஸ்தா முகர்ஜிக்கு மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக்கில் ஆபாச தகவல் அனுப்பி உள்ளார்.
 
ஒடனே அந்த நபரை சர்மிஸ்தா முகர்ஜி பிளாக் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து மீண்டும் அந்த நபர் தொடர்ந்து ஆபாச தகவல்களை அனுப்பியுள்ளார். சர்மிஸ்தா முகர்ஜி இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளார். அதன்பேரில் காவல் துறையினர் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இதையடுத்து ஆபாச தகவல்களை அனுப்பிய மர்ம நபரின் பேஸ்புக்கை ஸ்கிரின் சாட் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதை பலரும் பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார். அதன்மூலம் குற்றவாளியை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்