இவர் 2001 ஆம் ஆண்டிலிருந்து, மும்பையில் வசித்து வந்தாலும், பாகிஸ்தான் குடியுரிமையிலேயே வாழ்ந்தார். அவர் இந்திய குடியுரிமை பெற ஏற்கனவே விண்ணப்பித்திருந்தர். தற்போது அவர் தனது பாகிஸ்தான் குடியுரிமையை துறந்து விட்டதையடுத்து, அவருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடிவெடுத்ததாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இசையுலகிற்கு சமி செய்துள்ள சேவையை கருத்தில் கொண்டும், இந்தியாவை அவர் தனது வீடாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டதாலும், அவரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.