இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தை ரத்து

புதன், 13 ஜனவரி 2016 (23:35 IST)
ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

 
ஜனவரி 15 ஆம் தேதி அன்று, இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளர்கள் அளவில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்பட்டது.
 
இந்த நிலையில், பஞ்சாப் பதன் கோட் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
 
பதன் கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத தலைவர்களை கைது செய்ய வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்தது. மேலும், தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சு வார்த்தையை நடத்த முடியாது என்று  இந்தியா அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் தரப்பிலான பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்