பதன் கோட் விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத தலைவர்களை கைது செய்ய வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்தது. மேலும், தீவிரவாதிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சு வார்த்தையை நடத்த முடியாது என்று இந்தியா அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த இந்தியா-பாகிஸ்தான் தரப்பிலான பேச்சு வார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.