லண்டனுக்கு விமான சேவை தொடங்கும் இந்தியா! – பாதிப்பு ஏற்பட வாய்ப்பா?

புதன், 6 ஜனவரி 2021 (12:52 IST)
ஐரோப்பாவில் வீரியமிக்க கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் லண்டன் – இந்தியா இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சேவைகளுக்கு டிசம்பர் 31 வரை இந்திய அரசு தடை விதித்திருந்தது. இந்நிலையில் உலகம் முழுவதிலிருந்தும் சிறப்பு விமானங்கள் மட்டும் இந்தியாவிற்கு வந்துச் என்ற நிலையில் இங்கிலாந்தில் பரவிய புதிய கொரோனா வைரஸ் காரணமாக லண்டன் – இந்தியா இடையேயான விமான சேவை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகள் தயாராக உள்ள நிலையில் பிரிட்டனில் பரவும் வீரியமிக்க கொரோனாவால் இந்தியாவிற்கு பாதிப்பில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளதால் இன்று முதல் பிரிட்டனுடனான விமான சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. எனினும் வாரத்த்திற்கு 60 விமானங்கள் என்று இருந்த அனுமதி 30 விமானங்களுக்கான அனுமதியாக குறைக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்