ப.சிதம்பரம் கைது – வாய்திறந்த இந்திராணி முகர்ஜி !

வியாழன், 29 ஆகஸ்ட் 2019 (13:59 IST)
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது நல்ல செய்தி என இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 21 ஆம் தேதிகைது செய்யப்பட்டார். சிபிஐ அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் பின்னர் மேலு 5 நாட்கள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போது அவர் டெல்லி சிபிஐ வளாகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு முக்கியக் காரணமாக இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம் சொல்லப்படுகிறது. சிதம்பரம் கைது பற்றி இதுவரை எதுவும் சொல்லாத இந்திராணி ‘ சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது நல்ல செய்தி’ எனக் கருத்து தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்