பயிற்சியின்போது விபத்துக்குள்ளான இந்திய விமானப்படை விமானம்

வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (21:55 IST)
இந்திய விமானப் படைக்கு சொந்தமான Su-30 ரக விமானம் பயிற்சியின்போது விபத்திற்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து முதல்கட்டமாக கிடைத்த தகவலின்படி விபத்துக்குள்ளான இந்திய விமானப் படைக்கு சொந்தமான Su-30 ரக விமானம் தேஷ்பூர் என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது
 
இந்த விமானத்தில் இரண்டு விமானிகள் மட்டுமே பயணம் செய்ததாகவும், அந்த் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப்பட்டை அறிவித்துள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பாக விசாரிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த குழு உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் இந்திய விமானப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
விபத்துக்குள்ளான விமானம் எரியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்