இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தமும் தயங்க மாட்டேன்: வைகோ ஆவேசம்

ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (23:43 IST)
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தலில் பலமுறை தோல்வியடைந்தாலும், அவருடைய போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மோடியுடன் கூட்டணி வைத்தாலும் மோடி பதவியேற்கும் முன்பே அவரை எதிர்த்தவர்



 
 
பல ஆக்கபூர்வ போராட்டங்களை நடத்தியுள்ள வைகோ தற்போது இந்திய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தவும் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
 
இன்று செய்தியாளர்களை சந்தித்த வைகோ, '70 வயதை கடந்த தனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை என்றும், தமிழர்கள் நலனுக்கு எதிராக இந்திய அரசு செயல்பட்டால் உமர்முக்தார் போல ஆயுதம் தாங்கி போராடவும் தயங்க மாட்டேன்! என்று கூறியுள்ளார்.  வைகோவின் இந்த ஆவேச பேச்சு மதிமுக தொண்டர்களை உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்