சிறையில் ஒரு மாதம்.. இதுவரை யாரும் சந்திக்க வரவில்லை.. சோனம் சிறை வாழ்க்கை..!

Siva

திங்கள், 21 ஜூலை 2025 (13:14 IST)
தனது கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயாவில் தேனிலவின் போது அடியாட்களை வைத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சோனம் ரகுவன்ஷி, ஷில்லாங் சிறையில் ஒரு மாதம் சிறை வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார். ஆனால், இந்த ஒரு மாத காலத்தில் அவரது குடும்பத்தினர் உட்பட யாரும் அவரை வந்து சந்திக்கவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சிறை வட்டாரங்களின்படி, சோனம் சிறை விதிகளை மதித்து நடந்து வருகிறார். தனது குற்றம் குறித்தோ அல்லது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தோ அவர் சக கைதிகளிடமோ அல்லது சிறை நிர்வாகத்திடமோ பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
 
சோனம் சிறையில் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவருக்கு என தனியாக எந்த ஒரு பணியும் இதுவரை நியமிக்கப்படவில்லை என்றாலும், அவருக்குத் தையல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. மேலும், அவருக்கு தினமும் தொலைக்காட்சி பார்க்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
சோனம் சிறைக்கு வந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் உட்பட யாரும் அவரை இன்னும் சந்திக்க வரவில்லை என்றும், சோனம் கூட யாரையும் சந்திக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் சிறை நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். 
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்