கள்ளக்காதல் மனைவிக்கு ஜீவனாம்சம் தர தேவையில்லை: நீதிமன்றம் உத்தரவு

வியாழன், 3 நவம்பர் 2022 (16:10 IST)
கள்ளக்காதல் காரணமாக விவாகரத்து பெற்ற மனைவிக்கு அவரது கணவர் ஜீவனாம்சம் தர அவசியமில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சரத் என்பவர் தனது மனைவி கள்ளக் காதலில் இருப்பதாக காரணம் காட்டி விவாகரத்து பெற்றார் 
 
இதனை அடுத்து அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற அவரது மனைவி தனக்கு ஜீவனாம்சம் தர வேண்டும் என்று தனியாக ஒரு வழக்கு தொடுத்தார் 
 
அந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியான நிலையில் திருமணத்தை தாண்டி தகாத உறவு கடைபிடித்து வரும் சரத்தின் மனைவிக்கு ஜீவனாம்சம் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவருக்கு ஜீவனாம்சம் பெற உரிமை இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்