அனுமன் ஜெயந்தியில் வன்முறை; பலர் காயம்! – டெல்லியில் பரபரப்பு!

ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (10:16 IST)
டெல்லியில் அனுமன் ஜெயந்தி நிகழ்ச்சியில் நிகழ்ந்த மோதலில் பலர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியின் ஜகாங்கிர்புரி பகுதியில் நேற்று அனுமன் ஜெயந்தியில் ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது திடீரென இரு தரப்பினர் இடையே மோதல் எழுந்துள்ளது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டுள்ளனர்.

போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி மோதலை நிறுத்தியுள்ளனர். இதனால் காயம்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான சரியான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்