கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, விசாகப்பட்டினத்தில் இந்தியாவின் முதல் மெகா செயற்கை நுண்ணறிவு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து பிரதமர் மோடியிடம் விளக்கியதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த மையம், ஜிகாவாட் அளவிலான கணினித் திறனுடன், புதிய சர்வதேச கடலுக்கடி கேபிள் நுழைவாயிலையும் கொண்டிருக்கும். இது இந்தியாவின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும்.