பாஜகவில் இணைவதை பற்றி கூறிய போது கடவுள் அதை ஏற்றுக் கொண்டார்- முன்னாள் முதல்வர்

புதன், 14 செப்டம்பர் 2022 (15:59 IST)
கோவா காங்கிரஸ் தலைவர்களான திகம்பர் காமத் உள்ளிட்ட மைக்கேல் லோபோ தலைமையிலான 8 எம்.எல்.ஏக்கள் பாஜகவின்  இணைந்துள்ளனர்.

கோவாவில் காங்கிரஸ் கட்சிக்கு  11  சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த நிலையில்  முன்னாள் முதல்வர் திகம்பர்காமத், மைக்கேல் லோபோ உள்ளிட்ட 8 பேர் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்,  வட மாநிலங்களில் நடந்த சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் தோற்றது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்ட உட்கட்சிப் பூசல் காரணமாக குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் அக்கட்சியைவிட்டு விலகினர்.

தற்போது, ராகுல் கட்சியை பலப்படுத்த வேண்டும் ஒற்றுமையாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், கோவாவின் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உள்ளிட்ட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இன்று பாஜகவின் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து திகம்பர் காமத் கூறியதாவது:  தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸில் இருந்து விலகமாட்டோமென சத்தியம் செய்தது உண்மைதான். ஆனால், கடவுளிடம் சென்று பாஜகவின் இணையவுள்ளதாகக் கூறினேன். அவர் ஏற்றுக்கொண்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்