நாளை முதல் தீபாவளி முன்பதிவு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

புதன், 22 ஜூன் 2022 (18:56 IST)
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நினைப்பவர்கள் நாளை முதல் ரயிலில் முன்பதிவு செய்யலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 
 
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது சென்னையில் உள்ள தென் மாவட்ட மக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம் என்பதும் அதற்காக மூன்று மாதங்களுக்கு முன்பே ரயிலில் முன்பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல முடிவு செய்து இருப்பவர்கள் நாளை முதல் ரயிலில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
மூன்று மாதங்களுக்கு முன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்ற நிலையில் நாளை அந்த வசதி அறிமுகம் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்