இன்று முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மாற்று ஏற்பாட்டில் வணிகர்கள்!

வெள்ளி, 1 ஜூலை 2022 (09:01 IST)
இன்று முதல் நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதை அடுத்து வணிகர்கள் மாற்று ஏற்பாட்டை செய்து வருகின்றனர் 
 
ஜூலை 1-ஆம் தேதி முதல் அனைத்து விதமான ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்திருந்தது
 
அதன்படி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி, இறக்குமதி, விநியோகம், விற்பனை மற்றும் விற்பனைக்கு இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது
 
இதனை அடுத்து ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வந்த வணிகர்கள் அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்
 
குறிப்பாக குளிர்பானங்களுக்கு வழங்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு பதிலாக காகித ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்